Wednesday, March 16, 2011

குறைபாடுள்ள ரத்தினங்களை அறிந்து கொள்வது எப்படி ..? மாணிக்கம்,நீலம்,புஷ்பராகம்,

மாணிக்கம் 



சிவப்பு நிறமில்லாத,பால் படிந்த மாணிக்கங்கள், புகை படிந்தது போல் தோற்றம் கொண்ட மாணிக்கங்கள்,உடைந்த கரடு முரடான ஒழுங்கற்ற வடிவம் கொண்ட மாணிக்கக்கள்,மற்றும் துவாரம் உள்ள மாணிக்கங்கள் குறைபாடு கொண்டவை.

நீலம்  

நீலகல்லை  வாங்கியவுடன் அவற்றை அணிந்து  கொள்ள கூடாது.சில நாட்கள் நீல கல்லை வைத்து பார்த்து நல்ல  பலன் அளிக்கிறதா  என்பதை  அறிந்த பிறகே  நகையில்  பதித்து   அணிய  வேண்டும். தீய பலன் அளித்தால் அவை குறையுடையவை.


புஷ்பராகம்

கலங்கலான புஷ்பராகம்,ஒளியில்லாத,கருநிறம்  கொண்ட,மேடு பள்ளமான,வெண்மையான நீரோட்டம் கொண்ட புஷ்பராக கற்கள்  குறையுடையவை.


Tuesday, March 15, 2011

குறைபாடுள்ள (தரமற்ற) ரத்தின கற்களை கண்டுகொள்வது எப்படி..?

ரத்தினங்களில் போலிகளை கண்டு கொள்வது பற்றி பின்னர் காண்போம்..! இந்த பதிவில் சொல்ல  இருப்பது  அசல் ரத்தினங்களாக இருந்தாலும்  அவற்றில் உள்ள  குறைபாடுகளையும்,குற்றங்களையும் அறிந்து  கொள்வது எப்படி என்பதை காண்போம். குற்றங்கள்,குறைபாடுகள் உள்ள  ரத்தினங்களை அணிவது அமங்கலமாக கருதப்படுகிறது எனவே அவற்றை அணிய கூடாது..!

முக்கிய  குறிப்பு

ரத்தின கற்களை இரவு நேரங்களிலோ அல்லது  மின்  விளக்கு  ஒளியிலோ பார்த்து வாங்க கூடாது. நல்ல பகலில்  சூரிய ஒளியில் ஒரு பூதகண்ணாடி வழியே பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.அப்போதுதான் அவற்றில் உள்ள குறைபாடுகள்  தெளிவாக தெரியும்.!

குறை பாடுகள்

வைரம்


பொருத்தமற்ற  வடிவம் கொண்டவைரங்கள்,முனைகள் உடைந்த,துவாரம் உள்ள வைரங்கள், ஒளியற்ற வைரங்கள்,குமிழ்கள் உள்ள வைரங்கள்,நிற பேதமுள்ள வைரங்கள்,கீறல் உள்ள வைரங்கள் ஆகியவை குறை பாடுள்ள வைரங்கள் ஆகும்.

முத்து      

  
மச்சங்கள்,புள்ளிகள்,விரிசல் கொண்ட முத்துக்கள் குறைபாடுள்ளவை.மேலும் மெல்லிய கோடுகள் மற்றும் ஒளியற்ற தன்மை கொண்ட  முத்துக்களும்  குறையுடையவை



மரகதம்


மேடு பள்ளம்  உடையவை , துவாரங்கள்,கரும்புள்ளிகள், விரிசல்,கொண்ட மரகத கற்கள்  குறைபாடுள்ளவை.மேலும் ஒளியற்ற கற்களும்  குறை பாடுள்ளவை.


அடுத்த பதிவில் --- மாணிக்கம்,நீலம்,புஷ்பராகம்




Sunday, March 13, 2011

நவரத்தினங்கள் சுத்தி செய்தல்-- வைடூரியம்,கோமேதகம்,பவழம்

வைடூரியம்

வைடூரியத்தை குதிரையின் சிறுநீரில் ஒருநாள்  முழுவதும் போட்டுவைத்து பின்னர் அதை பூசணிகாய் சாறில் போட்டுவைக்க வேண்டும் .அதன்பின் அதை கழுவவேண்டும்.

கோமேதகம்  




கோமேதகத்தை  குதிரையின் சிறுநீரில் மூன்று நாட்கள் போட்டு பின்னர் நில பூசணிக்கிழங்கு சாறில் மூன்று நாட்கள் போட்டு வைக்க வேண்டும்.மீண்டும் அதனை எலுமிச்சை சாறில் மூன்றுநாட்கள் போட்டு  வைத்து வெந்நீரில்  கழுவவேண்டும்.

பவழம் 


ஒரு கண்ணாடி குவளையில் எலுமிச்சை பழ சாறை ஊற்றி அதில் பவழத்தை நான்கு மணி நேரம் போட்டு  வைத்து வெந்நீரில் கழுவ வேண்டும்.




Friday, March 11, 2011

நவரத்தினங்கள் சுத்திசெய்தல்......! மாணிக்கம்,நீலம்,புஷ்பராகம்

மாணிக்கம்


  குதிரையின் சிறுநீரில் மாணிக்கத்தை  மூன்று நாட்கள் போட்டு பிறகு வெயிலில் காய வைத்து  வெந்நீரில்  கழுவினால் மாணிக்கம் சுத்தமாகும்.


நீலம்


கழுதையின் சிறுநீரில் நீலகற்களை இரண்டுநாட்கள்  வைத்திருந்து வெய்யிலில் காய  வைத்து பிறகு  கழுவினால் நீலம் சுத்தமாகும்.

புஷ்பராகம் 

 
ஆட்டின் சிறுநீரில் புஷ்பராக கல்லை  இரண்டுநாட்கள்  வைத்திருந்து பிறகு  வெய்யிலில் காயவைத்து  கழுவினால் சுத்தமாகும்


இடைவெளிக்கு பின்....மீண்டும்...!

தவிர்க்க முடியாத  சில காரணங்களால் சில நாட்களாக  பதிவுகளை தொடர முடியவில்லை  மேலும் அதிஷ்டகல்  பரிந்துரை வேண்டி  மெயில் அனுப்பியவர்களுக்கும் பதில் அனுப்ப முடியவில்லை..!  இனி பதிவுகள்  தொடரும்...!  மெயில் அனுப்பியவர்களுக்கும்  விரைவில்  பதில் அனுப்புகிறேன்..!

தாமதத்திற்கு  பொருத்தருள்க...!

நன்றி...!

Friday, January 21, 2011

நவரத்தினங்களை சுத்தி செய்தல்..! (வைரம்...முத்து...மரகதம் )

வைரம்  


வைரத்தை பெண் குதிரையின் சிறு நீரில் மூன்று நாட்கள் ஊற வைத்து பின்னர் நல்ல  வெய்யிலில்  காய  வைத்தால் வைரம் சுத்தி ஆகும். எலுமிச்சை பழத்தினுள் வைரத்தை  வைத்து அகத்தி  இலை சாறில் வேக  வைத்து  எடுத்தாலும் வைரம் சுத்தி ஆகும்.

முத்து


பசுவின் சிறுநீர்,புளிப்புவகை காடி,பழச்சாறு ஆகியவற்றில்  சுத்தி  செய்து பசும்பாலில்  சுத்தம்  செய்ய வேண்டும்.  குண்டலி பரு ரசம்,புவியின் ரசம்,பொன்னங்காய் ரசம் ஆகிய வற்றில் மூன்று  நாட்கள் ஊற  வைத்தும்  முத்தை   சுத்தம்  செய்யலாம்.

மரகதம்  


நிலப்பூசணி கிழங்கை துவாரம் செய்து அதில் மரகதகல்லை வைத்து சிலைமண் செய்து குக்குட  புடமிட்டு காக்க சீதகத்தால்   எடுக்க  மரகதம்  சுத்தி ஆகும்.


Thursday, January 13, 2011

எந்த கல்லை எந்த கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும்..?

ஒவ்வொரு கல்லையும்  ஒரு குறிப்பிட்ட  தினத்தில்தான்  அணிய ஆரம்பிக்க வேண்டும் என சாஸ்திரம்  சொல்லுகிறது..!

அதன் படி எந்த கல்லை எந்த தினத்தில் அணிய ஆரம்பிக்க வேண்டும் என்பதை காண்போம்...!

ஞாயிறு 
மாணிக்கம்,கோமேதகம்
 ..
திங்கள் 
முத்து,வைடூரியம்
 ..
செவ்வாய்
பவழம்
..
புதன்
மரகதம் 
 ..
வியாழன்
புஷ்பராகம்
..
வெள்ளி 
வைரம்
 ..
சனி
நீலம்




..

Wednesday, January 12, 2011

ஆங்கில முறைப்படி அதிஷ்ட கற்களை தேர்வு செய்வது எப்படி...?

ஆங்கிலேயர்கள்  தாங்கள் பிறந்த  மாதத்தின் படி ரத்தினங்களை தேர்ந்தெடுத்து அணிகிறார்கள்.இப்படி தேர்ந்தெடுக்கும் முறை 1912 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய பொற்கொல்லர் கூட்டத்தில் அங்கீகரிகப் பட்டது.



                                ஜனவரி
  
கார்னட்

                                பிப்ரவரி

அமிதிஸ்ட்
                           
                                மார்ச்

அக்வாமெரின் (அல்லது) ப்ளட் ஸ்டோன்
                               
                               ஏப்ரல்

 வைரம்
                             
                               மே

மரகதம்
                             
                               ஜூன்

முத்து (அல்லது) சர்டோனிக்

                              ஜூலை

மாணிக்கம்

                             ஆகஸ்ட்

பெரிடாட் (அல்லது) சர்டோனிக்

                            செப்டம்பர்

நீலம்

                           அக்டோபர்

ஓப்பல்(அல்லது) டூர்மலின்

                            நவம்பர்

டோபாஸ்

                           டிசம்பர்

 டர்காய்ஸ் (அல்லது) லாபிஸ் லஜூலி

Tuesday, January 11, 2011

உங்களின் தொழிலுக்கேற்ற அதிஷ்டரத்தினம் எது..?

ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கேற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை அணிந்தால் பெரிய அளவில் வெற்றி பெறலாம்..ரத்தினங்களானது தொழில்,அல்லது வியாபார மந்த நிலையை  போக்கி சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.

ரத்தின  நிபுணர்கள்  ஏனோ... எந்த தொழிலுக்கு  எந்த கல் ஏற்றது என்ற தகவலை  வெளியிடுவதில்லை. எந்த கல் எந்த தொழிலுக்கு ஏற்றது என்பதை  காண்போம்.

புஷ்பராகம்

  கல்வித்துறை
கலைத்துறை
எழுத்து துறை
பொருளாதார துறை
சமய துறை
அற நிலைய துறை

..
வைரம்

விவசாயம்
நிர்வாகம்
கோழிப்பண்ணை
பால் பண்ணை
பழ மரங்கள் பயிரிடுவோர்

கோமேதகம்

ஜோதிடர்
கைரேகை நிபுணர்
அரசியல் விமர்சகர்

முத்து 

உலோகம்
இசைதுறை
கணித துறை 

மரகதம்

அலங்கார பொருள் விற்பனை
துணி
எண்ணை
காகிதம்
ஏஜன்ஸி
காண்ட்ராக்ட்

மாணிக்கம்

அரசு சம்பந்த பட்ட தொழில்
விளையாட்டு  சம்பந்த பட்ட தொழில்
நடிப்பு துறை 

பவழம்

கட்டிட தொழில்
மின்சாரம்
காவல் துறை
இராணுவம்

நீலம்

 வீட்டு மனை,வீடு விற்பனை
இரும்பு
ஒரே நேரத்தில் பல தொழில் செய்பவர்கள் 

வைடூரியம்
 சட்டம்
நீதிமன்றம் சம்பந்த பட்ட தொழில்
மருத்துவம்
அச்சு கலை
திரைப்படத்துறை
பத்திரிக்கைத்துறை


மேலே சொன்ன கற்கள் அனைத்தும் அந்தந்த தொழிலுக்கு சிறப்பு சேர்க்கக் கூடியவை.எனினும் குறிப்பிட்ட ஜாதகரின் ஜாதத்தின் பலாபலன்களை கருத்தில் கொண்டு இந்த கற்களோடு ஜாதகரின் அதிர்ஷ்ட கல்லையும் இணைத்துப் போடுவது கூடுதல் சிறப்பு.



.

Monday, January 10, 2011

கம்ப்யூட்டரில் இருந்து வெளிவரும் கெடுதலான கதிர் வீச்சிலிருந்து காக்கும் ஒரு கல்...!




அமிதிஸ்ட் 




இந்த கல்லை பற்றி ஏற்கனவே  கொஞ்சம் அறிந்து  கொண்டோம். அமிதிஸ்ட் கற்களில் இருந்து வெளிவரும்  கதிர்கள் பல நன்மைகள் செய்கிறது. மேலும் இந்த கல்லை பற்றி சொல்ல பல விஷயங்கள்  உள்ளன. அவற்றையெல்லாம் பின் வரும் பதிவுகளில் மீண்டும் காண்போம். இப்போது  அமிதிஸ்ட்  பற்றி  ஒரு  தகவல். அமிதிஸ்ட் கற்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள் கணினியில் இருந்து வெளிவரும்  கெடுதலான கதிர்களை தடுத்து விடுகின்றன.  அதாவது  word processor  என்னும் கம்ப்யூட்டர்  கருவிகளை  பயன் படுத்துபவர்கள் ஒரு  சிறிய   அமிதிஸ்ட்  கல்லை VDU ஸ்கிரீனில் வைத்துவிட்டால் போதும் கணினி யில் இருந்து வெளிவரும்  கெடுதலான கதிர்களில் இருந்து காத்து கொள்ளலாம்.   

Sunday, January 9, 2011

அதிர்ஷ்ட கற்களுக்கான உலோகங்களும், அணிய வேண்டிய விரல்களும்...!


மாணிக்கம்
உலோகம் - தங்கம்
விரல்- மோதிர விரல்


முத்து
உலோகம்--  தங்கம் அல்லது வெள்ளி
விரல்- ஆள்காட்டி விரல்,மோதிர விரல்


புஷ்பராகம்,கனக புஷ்பராகம்
உலோகம்--தங்கம்
விரல்--ஆள்காட்டி விரல்


கோமேதகம்

உலோகம்-வெள்ளி அல்லது தங்கம்
விரல் -- மோதிர விரல்,நடு  விரல்


மரகதம்
உலோகம்-- தங்கம் அல்லது வெள்ளி
விரல்- சுண்டு விரல்,மோதிர விரல்


வைரம்
உலோகம்-தங்கம் அல்லது பிளாட்டினம்
விரல்- மோதிர விரல்


வைடூரியம்
உலோகம்--தங்கம் அல்லது வெள்ளி
விரல்--  நடு விரல்,சுண்டு விரல் மோதிர விரல்


நீலம்
உலோகம்-- வெள்ளி,பிளாட்டினம்,தங்கம்
விரல்    --  நடு விரல்

பவழம்

உலோகம்-தங்கம்,வெள்ளி,செம்பு
விரல்-மோதிர விரல்,

Thursday, January 6, 2011

நவரத்தின மோதிரங்கள்--- யார், எப்படி அணியவேண்டும்...? ஒரு பார்வை



செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து.மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம்.நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல்,தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும்.தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும்.இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.

பதிக்கும் முறை  


மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும்.பிறகு கடிகார சுற்றுபடி  முத்து,பவளம்,கோமேதகம்,நீலம்,வைடூரியம்,புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.        

நவரத்தினங்கள்  தரும் நற்பலன்கள் 

நவரத்தின மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால்        அவர் மிக சிறந்த  அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம்.எதிலும் வெற்றிகிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி,புகழ்,செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும்.போடும்  திட்டங்கள்  எல்லாம்  சரியானதாக இருக்கும்.உழைப்பிற்க்கு  முழுமையான வெற்றி கிடைக்கும்.

யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் ...?

மேஷ ராசி,மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம்,அவிட்டம், சித்திரை         ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண்  9 வருபவர்களும் அணியலாம்.

பிறவி       எண்  2,7  கொண்டவர்கள்  நவரத்தின மோதிரம் அணிய கூடாது.  வேறு   எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின்  ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும்.

Wednesday, January 5, 2011

உப ரத்தினங்கள் ---- ஆனிக்ஸ் (onyx), பெரில் கற்கள் (beryl stone)

ஆனிக்ஸ் 


இயந்திரங்கள், உலோகங்கள்  ஆகியவற்றில் பணிபுரிவோர்க்கு நல்ல பலனை கொடுக்கும்.இரவில் அதிகம் பயம் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் பயம் நீங்கும். திருஷ்டி அதிகம்  உள்ளவர்கள்  இந்த கல்லை அணியலாம்.ரியல் எஸ்டேட் தொழிலில்  இருப்பவர்களுக்கு  சிறந்த பலனை கொடுக்கும். மனதில்  படபடப்பு, மன  நிம்மதியின்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.  உத்தியோக  உயர்வை கொடுக்கும்.

யாரெல்லாம்  அணியலாம்..? 

6,15,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இக்கல்லை அணிந்து பலன் அடையலாம் . மரகதககல்லிற்க்கு மாற்றாக இந்த கல்லை அணியலாம்.
 ........

பெரில் கற்கள்


பொதுவில் பச்சை நிறம் கொண்ட இந்த கற்கள் நீலம்,சிவப்பு மற்றும்  தேன்  நிறத்திலும் கிடைக்கிறது. இந்த கல்லை  அணிந்தால் கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வளமான  வாழ்க்கை அமையும். குடும்பத்தில்  சுப  நிகழ்ச்சிகள்  நடக்கும்.

மருத்துவ குணங்கள்

சிறுநீரக கோளாறுகள் நீங்கும், நரம்பு தளைச்சியை போக்கி  நரம்புகளுக்கு  நல்ல பலத்தை கொடுக்கும்.ரத்த சோகை நீங்கும். வாதம்,பித்தம் ஆகியவற்றை சமன் செய்யும்.தாம்பத்ய வாழ்வில் ஆர்வத்தை கொடுக்கும். தொண்டை,ஈரல் வியாதிகளை குணமாக்கும்.

யாரெல்லாம் அணியலாம்..?

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் துலாம்,ரிசப ராசிக்காரர்கள் இந்த கல்லை அணிந்து பலன் அடையலாம் . 

Tuesday, January 4, 2011

உப ரத்தினங்கள் --சந்திர காந்தகற்கள் (moon stone),சூரிய காந்தகற்கள்( sun stone)

    சந்திர காந்த கற்கள்  

இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். பொருள்வரவு தடையின்றி கிடைக்கும்.கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும்.ஜலகண்டதில் இருந்து காக்கும்.நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

மருத்துவ குணங்கள்   

தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இருதய கோளாறுகளை போக்கும்.வயிற்று  பிரச்சனைகளை நீக்கும்.குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.

யாரெல்லாம் அணியலாம் ..?    
   
2,11,20,29   ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 7,16,25 ஆகிய தேதிகளில்   பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு  மாற்றாகவும் அணியலாம்.


சூரிய காந்த கற்கள்
 

  இந்த கல்லை அணிவதால் திடீர் முன்னேற்றம் உண்டாகும் .துரதிஷ்ட்டங்கள்  விலகி அதிஷ்ட்டம் உண்டாகும்.பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு சம்பந்தமான தடைகள் நீங்கும்.


யாரெல்லாம் அணியலாம் ..?


 1,10,19,28   ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் சிம்ம ராசி, சிம்ம லக்கினம்  கொண்டவர்கள் இக்கல்லை  அணியலாம் . மாணிக்க கல்லுக்கு மாற்றாகவும் இக்கல்லை  அணிந்து பலன் பெறலாம்.   
 
குறிப்பு;-
   சபரி மலை பயணம்  அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக  ஊர் பயணங்கள் இருந்த படியால் பதிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது,இனி பதிவுகள் தொடர்ந்து வரும்.மேலும்  மெயில்  மூலம் கற்கள்  பற்றி ஆலோசனை கேட்டவர்களுக்கும் பதில் அனுப்ப இயலவில்லை ஆலோசனை கேட்ட அனைவருக்கும்  இந்த வார  இறுதிக்குள் படிப்படியாக    பதில் அனுப்புகிறேன்.